Sunday 5th of May 2024 02:03:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஹொங்கொங்கில் மீண்டும் சமூகத் தொற்று  பரவலை அடுத்து பாடசாலைகளுக்குப் பூட்டு!

ஹொங்கொங்கில் மீண்டும் சமூகத் தொற்று பரவலை அடுத்து பாடசாலைகளுக்குப் பூட்டு!


ஹொங்கொங்கில் மீண்டும் கொரோனா சமூகத் தொற்று அதிகரித்து வருவதையடுத்து அனைத்துப் பாடசாலைகளையும் மூடத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் கோடைகால விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஹொங்கொங் கல்வித் துறை செயலாளர் கெவின் யுவெங் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, கடந்த மே மாத இறுதியில் பாடசாலைகள் திறக்கப்பட்டன.

அத்துடன், மக்கள் வேலைக்குத் திரும்பி உணவகங்களில் கூட்டம் மீண்டும் காணப்பட்ட நிலையில் ஹொங்கொங்கில் தொற்று நோய் அதிகரித்து வருகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை அங்கு 38 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனா். அவா்களில் 32 போ் சமூகத்துக்குள் தொற்றுக்குள்ளானவா்களாக உறுதிப்படுத்தப்பட்டனா்.

தொற்று நோய் பரவிவரும் நிலையில் தளா்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஹொங்கொங்கில் மீண்டும் இறுக்கமாக்கப்பட்டு வருகின்றன.

உணவகங்களில் வார இறுதி நாட்களில் 60 வீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், உணவகங்களில் ஒரு மேசையைச் சுற்றி எட்டுப் பேரும் மதுக்கூடங்களில் அந்த எண்ணிக்கை நால்வர் என்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

ஹொங்கொங்கில் கடந்த பெப்ரவரி மாத்திலும் தொடா்ந்து ஏப்ரல் மாதத்திலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டபோதும் அவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் மீண்டும் தொற்று நோய் பரவி வருகிறது.

எனினும் ஹொங்கொங்கில் ஆரம்பம் முதல் இதுவரை 1,403 பேரே தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டதுடன், 7 மரணங்களே பதிவாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE